Angaraka Jayanthi Sevvai Jayanthi Runa Vimochana Bhoomi Karaka R...
நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று அங்காரக ஜெயந்தி. நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் அங்காரகன் என்றும் அழைக்கப்படுவார். அவர் பாவ கிரகங்களில் ஒன்று. ஆனால் சொத்து சேர்த்தல், கடன் அடைத்தல், உறவு பினைத்தல், ரியல் எஸ்டேட் வியாபாரம் போன்ற காரகங்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்தவர். இன்று இந்த அங்காரக ஜெயந்தியில் உங்கள் அருகில் உள்ள கோவிலில் அமைந்த நவக்கிரகங்கள் தளத்திற்கு சென்று, அங்காரகனுக்கு சிவப்பு நிற மலர்கள் சூட்டி, அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் சிகப்பு திரியிட்டு, மனதில் கடன் அடைய சங்கல்பம் செய்து கொண்டு அல்லது பூமி வாங்க விற்க சங்கல்பம் செய்து கொண்டு அல்லது உங்கள் உறவில் எந்த பிரிவினையும் வராமல் இருக்க சங்கல்பம் செய்து கொண்டு, அதாவது உங்களுக்கு என்ன பிரச்சனையோ அந்தக் குறை தீர சங்கல்பம் செய்து கொண்டு, உங்கள் பெயர், கோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். பிறகு கோவிலில் அமர்ந்து செவ்வாயை மனதார பிரார்த்தித்து இந்த மந்திரத்தை 21 முறை ஜெபித்து சிவனை வழிபட்டு வீடு திரும்புங்கள். உங்களுக்கு அங்காரகன் உடைய அருள் பூர்த்தியாக கிடைத்து உங்களது பிரச்சனைகளை நிவர்த்தி அடைந்து அவருடைய அருள் ஆசி என்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கிடைக்கும். ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! ஓம் நமச்சிவாய!

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home